பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

அறிமுக இயக்குநர் து.ப.சரவணன் இயக்கத்தில் புதிய திரைப்படத்திற்காக விஷால் ஒப்பந்தமானார். பிரபல குறும்படமான, “எது தேவையோ அதுவே தர்மம்!” என்கிற குறும்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் சரவணன் அந்த படத்துக்காக பல விருதுகளை பெற்று இருந்தார். இந்நிலையில் தான் இவர் விஷால் நடிக்கும் விஷால் 31 என்கிற இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தற்காலிகமாக இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தெலுங்கானா மாநிலத்தில் இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அங்கு மீண்டும் விஷால் 31 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படப்பிடிப்பின் இடைவேளையின்போது நடிகர் விஷால் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.