தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் மிருணாள் தாக்கூர் | 'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? |
ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிப்பில் கொடி கட்டி பறக்கும் நடிகைகள் அனைவருக்குமே பக்கா மாஸ் ஹீரோயினாக வேண்டும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். கருப்பு வெள்ளை காலத்தில் சாவித்ரி, 80 களில் சரிதா, இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ்.
சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேசுக்கு அடையாளம் கொடுத்தது அட்டக்கத்தி. அதில் அவர் வடசென்னை பெண்ணாக நடித்தார். அப்படி தொடங்கியதோ என்னவோ வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் அவர் வடசென்னை பெண்ணாக நடித்தார். காக்கா முட்டை படம் அவரை தேசிய விருது வரை பேசவைத்தாலும். இரு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தன் மூலம் அவரை மாஸ் ஹீரோயினாக கற்பனையில் கூட எந்த இயக்குனரும் காணவில்லை.
தனக்கு ஏற்பட்டுள்ள குடும்ப இமேஜை மாற்ற நினைக்கும் ஐஸ்வர்யா அடிக்கடி தன்னை வேறுவிதமாக மாற்றிக் காட்டும் முயற்சியாக கிளாமரான போட்டோ ஷூட்களை நடத்தி அதன் படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் படங்கள் அதற்கு சிகரம் வைத்தது போன்று இருக்கிறது. கமர்ஷியல் ஹீரோயினாகவும் ஐஸ்வர்யா ஜொலிக்கும் வாய்ப்புகள் இருப்பதை இந்த படங்கள் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை தரலாம்.