ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
ஒவ்வொரு காலகட்டத்திலும் நடிப்பில் கொடி கட்டி பறக்கும் நடிகைகள் அனைவருக்குமே பக்கா மாஸ் ஹீரோயினாக வேண்டும் என்கிற எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். கருப்பு வெள்ளை காலத்தில் சாவித்ரி, 80 களில் சரிதா, இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ்.
சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேசுக்கு அடையாளம் கொடுத்தது அட்டக்கத்தி. அதில் அவர் வடசென்னை பெண்ணாக நடித்தார். அப்படி தொடங்கியதோ என்னவோ வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் அவர் வடசென்னை பெண்ணாக நடித்தார். காக்கா முட்டை படம் அவரை தேசிய விருது வரை பேசவைத்தாலும். இரு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்தன் மூலம் அவரை மாஸ் ஹீரோயினாக கற்பனையில் கூட எந்த இயக்குனரும் காணவில்லை.
தனக்கு ஏற்பட்டுள்ள குடும்ப இமேஜை மாற்ற நினைக்கும் ஐஸ்வர்யா அடிக்கடி தன்னை வேறுவிதமாக மாற்றிக் காட்டும் முயற்சியாக கிளாமரான போட்டோ ஷூட்களை நடத்தி அதன் படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் படங்கள் அதற்கு சிகரம் வைத்தது போன்று இருக்கிறது. கமர்ஷியல் ஹீரோயினாகவும் ஐஸ்வர்யா ஜொலிக்கும் வாய்ப்புகள் இருப்பதை இந்த படங்கள் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை தரலாம்.