பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை |
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் திட்டம் இரண்டு. இப்படம் ஓடிடியில் வெளியாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது, முதன்முறையாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம். மர்டர் மிஸ்டரி திரில்லர் வகை படம். உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. உயிர்த்தோழி ஒருவர் காணாமல் போகிறார். அதை விசாரிக்கையில் அவர் கொல்லப்பட்டது தெரிய வருகிறது. அந்த கொலை தொடர்பான விசாரணை தான் படம்.
போலீசாக இருந்தாலும் வழக்கமாக படங்களில் காட்டப்படும் பெண் போலீசாக அல்லாமல் காதல், எமோஷனல் எல்லாவற்றையும் காட்டவேண்டிய ஒரு கதாபாத்திரம். கொரோனா காலகட்டத்தில் யாருமே எதிர்பாராத அளவுக்கு சினிமா வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. எனக்கும் தியேட்டர்களில் ரிலீசாக தான் ஆசை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அதற்கு சாதகமாக இல்லையே... படம் நன்றாக இருந்தால் போதும். தியேட்டர் ரிலீஸ் இல்லாவிட்டாலும் எல்லோரையும் சென்று சேர்கிறது.
ஒரு படத்தை எடுத்து கையில் வைத்துக்கொண்டே இருப்பது என்பது தயாரிப்பாளருக்கு பலத்த இழப்பை தரும். சூரரை போற்று, க/பெ.ரணசிங்கம், இப்போது சார்பட்டா பரம்பரை என ஓடிடியிலும் படங்கள் ஹிட் அடிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்