கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
வனிதா விஜயகுமாரும், நடிகருமான பவர் ஸ்டார் சீனிவாசனும் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த வனிதா விஜயகுமார், பவர் ஸ்டார் சீனிவாசன் இயக்கத்தில் தான் நடிக்கும் பிக்கப் டிராப் படத்தின் போஸ்டர்கள் அவை என்று விளக்கினார்.
அப்போது பேசிய வனிதா விஜயகுமார், இரண்டு நடிகர்கள் சேர்ந்து போட்டோ வெளியிட்டால் அதை திருமணம் என்பதா. இதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை. தனிப்பட்ட வாழ்கையில் பெண்களுக்கு சுதந்திரம் தேவை. ஒரு ஆண் நான்கைந்து திருமணம் செய்தால் கூட அதை யாரும் பேசுவதில்லை. ஆனால் அதுவே ஒரு பெண் செய்தால் பேசுகின்றனர். நான் நான்கு அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது என்னுடைய உரிமை. பெண்களைப் பற்றித் தொடர்ந்து இந்த சமூகம் அவதூறாக பேசி வருவதால் தான் தற்கொலைகள் அதிகரிக்கின்றன. ஒருவருடன் வாழ்ந்து கொண்டே பலருடன் தொடர்பில் இருப்பது தான் தவறு. நான் 40 கல்யாணம் பண்ண மாட்டேன், எதற்காக அப்படி சொன்னேன் என்று உங்களுக்கு புரியும். இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்றார்.
சீனிவாசன் பேசுகையில், ‛‛இந்த சமூகத்தில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் சரியான வாழ்க்கையை வாழ்வது இல்லை. ஆனால் வெளியே சொல்லாமல் வாழ்கிறார்கள். அந்தவகையில் வனிதா விஜயகுமார் ஒரு இரும்பு பெண்மணி என்றார்.