ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
காக்க முட்டை படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை சில புள்ளிகள் வித்தியாசத்தில் தவறவிட்டவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்து கனா படத்திற்கு கிடைக்கும் என்றார்கள். அதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் தான் தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கியது. இந்த நிலையில் சென்னையில் நடந்து வந்த 18வது சர்வதேச திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராஜேசுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. க.பெ.ரணசிங்கம் படத்தில் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருப்பதாவது: உழைப்பிற்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும் போது அது பெரிய மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில் இந்த விருதைப் பெற்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. க/பெ ரணசிங்கம் படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் என் அன்பான நன்றி. மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருதும் சமீபத்தில் எனக்குக் கிடைத்தது. அதற்கு தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். நல்ல நடிகை என்ற அடையாளத்தை எனக்குள் ஊன்றிய ரசிகர்களுக்கு பேரன்பும் பெரு நன்றியும். என்றார்