கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
பூவரசம் பீ பீ, சில்லுக்கருப்பட்டி படங்கள் மூலம் தரமான இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஹலீதா ஷமீம் அடுத்து இயக்கி உள்ள படம் ஏலே. இது ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவையும், உரசலையும் பேசுகிறது. தந்தையாக சமுத்திரகனியும், மகனாக புதுமுகம் மணி கண்டனும் நடித்துள்ளனர்.
இந்த படம் தியேட்டர்களில் வெளியிடப்படுவதாக இருந்தது. தியேட்டரில் வெளியான இரண்டாவது வாரம் ஓடிடி தளத்திலும் வெளியாக இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை திரையிட மறுத்து விட்டனர்.
ஒரு மாதத்திற்கு பின்பே ஓடிடியில் வெளியிடுவோம் என்று உத்தரவாக கடிதம் கொடுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் கூறினார்கள். இதனை மறுத்த தயாரிப்பாளர்களான புஷ்கர், காயத்ரி ஆகியோர் படத்தை விஜய் டி.வியில் வெளியிடப்போவதாக அதிரடியாக அறிவித்தனர்.
அதன்படி நாளை (28ம் தேதி) பிற்பகல் 3 மணிக்கு விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது.