'புஷ்பா 2' தியேட்டர் நெரிசல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | தலைவன் தலைவி சக்சஸ் மீட் எப்போது | இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வரும் அனுஷ்கா | முருகதாஸ், சிவகார்த்திகேயன் இரண்டு பேருக்கும் மதராஸி முக்கியம் | 'த காலர்' பிரிட்டிஷ் படத்தின் காப்பியா 'ஹவுஸ்மேட்ஸ்'? | 'ஐமேக்ஸ்' ரிலீஸ் இல்லாத 'கூலி': ரசிகர்கள் வருத்தம் | குழந்தைகளும் பார்க்கும் வகையிலான பேய்கதை | அரசியலில் இருந்து விலகிய பிறகும் விமர்சிக்கிறார்கள்: சிரஞ்சீவி பேச்சு | மதுரை மாநாடு நடப்பதென்ன... நடிகர், நடிகைகள் இணைகிறார்களா? | மூத்த நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் |
'இந்தியன் 2' பட விவகாரத்தில் தங்களது படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கர் போகக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைகா வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் காரணமாக ஷங்கர், ராம் சரண் கூட்டணி சேர உள்ள தெலுங்குப் படத்திற்கான சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. வழக்கின் காரணமாக இப்படத்தை ஷங்கர் இயக்குவாரா மாட்டாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. ராம் சரண் கூட ஷங்கருக்கு ஒரு வாரம் மட்டுமே டைம் கொடுத்ததாகவும் டோலிவுட்டில் சொன்னார்கள்.
தற்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் ராம் சரண் படத்தை ஷங்கர் தாராளமாக இயக்கலாம். இருப்பினும் 'இந்தியன் 2' படத்தைத் தயாரிக்க சுமார் 200 கோடி ரூபாய் செலவு செய்த தயாரிப்பாளரை ஷங்கர் தவிக்க விட்டுச் செல்வது குறித்து தமிழ் தயாரிப்பாளர்கள் சிலர் கொதிப்பில் இருக்கிறார்கள்.
சமீப காலமாக சில முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் தமிழ் தயாரிப்பாளர்களைப் புறக்கணித்து தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஷங்கர், விஜய், தனுஷ் ஆகியோரது அடுத்த படங்களை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் தயாரிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.