இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'இந்தியன் 2' பட விவகாரத்தில் தங்களது படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கர் போகக் கூடாது என தயாரிப்பு நிறுவனமான லைகா வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன் காரணமாக ஷங்கர், ராம் சரண் கூட்டணி சேர உள்ள தெலுங்குப் படத்திற்கான சிக்கலுக்கு தீர்வு கிடைத்துள்ளது. வழக்கின் காரணமாக இப்படத்தை ஷங்கர் இயக்குவாரா மாட்டாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. ராம் சரண் கூட ஷங்கருக்கு ஒரு வாரம் மட்டுமே டைம் கொடுத்ததாகவும் டோலிவுட்டில் சொன்னார்கள்.
தற்போது தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் ராம் சரண் படத்தை ஷங்கர் தாராளமாக இயக்கலாம். இருப்பினும் 'இந்தியன் 2' படத்தைத் தயாரிக்க சுமார் 200 கோடி ரூபாய் செலவு செய்த தயாரிப்பாளரை ஷங்கர் தவிக்க விட்டுச் செல்வது குறித்து தமிழ் தயாரிப்பாளர்கள் சிலர் கொதிப்பில் இருக்கிறார்கள்.
சமீப காலமாக சில முன்னணி இயக்குனர்களும், நடிகர்களும் தமிழ் தயாரிப்பாளர்களைப் புறக்கணித்து தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு முக்கியத்துவம் தருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஷங்கர், விஜய், தனுஷ் ஆகியோரது அடுத்த படங்களை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தான் தயாரிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.