பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியின் 5வது சீசன் அடுத்த மாதமோ அல்லது செப்டம்பர் மாதமோ ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நான்கு சீசன்களாக 'டாஸ்க்' என்ற பெயரில் சில பல அபத்தமான 'டாஸ்க்'குகளும் நிகழ்ச்சியில் நடைபெற்றது. சுவாரசியமில்லாத அம்மாதிரியான நிகழ்வுகளுக்கு வர உள்ள புதிய சீசனில் 'குட்பை' சொல்ல உள்ளார்களாம்.
சில பல புதிய நிகழ்வுகளை வர உள்ள 5வது சீசனில் வைக்க வேண்டும் என கிரியேட்டிவ் குழுவினர் மூளையைப் போட்டு கசக்கி வருகிறார்களாம். நிகழ்ச்சி முந்தைய நான்கு சீசன்களை விட பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறதாம் தயாரிப்புக் குழு. எனவே, நிகழ்ச்சிக்கான பட்ஜெட்டையும் இந்த வருடம் இரு மடங்காக உயர்த்தி உள்ளார்களாம்.
கடந்த நான்காவது சீசனில் சினிமா பிரபலங்களை விட டிவி பிரபலங்கள் தான் அதிகமாக இருந்தது. எனவே, வர உள்ள ஐந்தாவது சீசனில் சினிமா பிரபலங்கள் சிலர் கண்டிப்பாக இடம் பெற்றாக வேண்டும் என சேனல் தரப்பிலிருந்தும் அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளதாம்.
பிக்பாஸ் வீடு மட்டும் வழக்கம் போல புதுப் பொலிவுடன் இருந்தால் போதாது, நிகழ்ச்சிக்குள்ளும் புதுப் பொலிவு வேண்டும் என்பதுதான் இந்த வருட டார்கெட் என்கிறார்கள்.