தமிழ்நாடு தி பியுட்டி : சோபிதாவின் டூர் டைரி | தென்னிந்திய நடிகர் மீது தமன்னா குற்றச்சாட்டு | பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா ஆகியவற்றில் தியேட்டர்களைத் திறக்க அந்தந்த அரசுகள் அனுமதி வழங்கிவிட்டன. இருந்தாலும் தங்கள் கோரிக்கைகளைப் பற்றி எதுவும் சொல்லாத தயாரிப்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தியேட்டர்களைத் திறப்பதில்லை என தியேட்டர்காரர்கள் முடிவு செய்துள்ளனர்.
அது சம்பந்தமாக நேற்று தெலங்கானா பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸின் பொதுக்குழு கூடியது. ஓடிடி தளங்களில் திரைப்படங்களை நேரடியாக வெளியிடக் கொடுப்பதை அக்டோபர் வரையில் நிறுத்த வேண்டும். தியேட்டர்களும் திரையுலகத்தில் ஒருங்கிணைந்த ஒன்று தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கில் சில பெரிய நடிகர்களின் படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் தியேட்டர்களைத் திறக்க மாட்டோம் என அந்த சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த வருடம் சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' படம் வந்த போது இங்குள்ள தியேட்டர்காரர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தற்போது யாரும் அதைப் பற்றி கண்டு கொள்வதில்லை.