தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இப்போதெல்லாம் எல்லாமே ஆன்லைன் மயமாகி விட்டது. தங்கள் பொருட்களை ஏலம் விடும் வழக்கம் ஆன்லைனில் ஏற்கனவே தொடங்கி விட்டது. அந்த வரிசையில் இசை அமைப்பாளர்கள் தங்கள் பாடலை ஏலத்தில் விடும் முறை ஹாலிவுட், பாலிவுட்டில் ஏற்கெனவே தொடங்கி விட்டது.
தமிழில் இதனை ஜிப்ரான் தொடங்கி வைத்தார். அவர் இசை அமைத்த சாஹோ படத்திற்கு உருவான இசை ஒன்று அந்த படத்தில் பயன்படுத்தப்படவில்லை. அதனை அவர் ஏலத்துக்கு கொண்டு வந்தார். தற்போது அதே வழியில் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தான் உருவாக்கிய பாடல்களை ஆன்லைன் மூலம் ஏலத்துக்கு கொண்டு வருகிறார். முதல்கட்டடமாக அவர் 6 பாடல்களை ஏலம் விடுகிறார்.
இந்த ஆன்லைன் ஏலமுறை (என்எப்டி) முதன்முதலாக 2017ம் ஆண்டு கிரிப்டோகிட்டீஸ் என்ற ஆன்லைன் கேமில் தான் அறிமுகமானது. அந்த ஆன்லைன் கேமில் வரும் பூனைகளை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இப்படித்தான் என்எப்டி நடைமுறைக்கு வந்தது. பூனையில் ஆரம்பித்தது தற்போது ரியல் எஸ்டேட் அளவு வளர்ந்து தற்போது இசைக்கும் வந்திருக்கிறது.