இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. அதனால் இதன் முதல் பாகத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக வேணு ஸ்ரீராம் என்பவர் இயக்கும் படத்தில் நடிக்கலாம் என முடிவு செய்துள்ளார் அல்லு அர்ஜுன். அதை முடித்துவிட்டு மீண்டும் புஷ்பா-2வுக்கு திரும்பலாம் என்பது அவரது எண்ணம்.
ஆனால் படத்தின் தயாரிப்பாளரோ புஷ்பாவின் இரண்டாம் பாகத்தையும் ஒருசேர முடித்துவிட்டு அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க செல்லட்டும் என நினைக்கிறாராம். காரணம் புஷ்பா படம் செம்மர கடத்தல் பின்னணியை மையமாக வைத்து உருவாகி வருகிறது. லாரி டிரைவராக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். இதற்காக நீண்ட தலைமுடி எல்லாம் வளர்த்து ரப் அன்ட் டப்பான ஆளாக மாறியுள்ளதோடு, உடல் எடையையும் கூட்டியுள்ளார் அல்லு அர்ஜுன்.
இன்னொரு படத்தில் நடித்துவிட்டு வந்தால் மீண்டும் கெட்டப் மாற்றி இரண்டாம் பாகத்தை முடிக்க தாமதமாகி விடும் என தயாரிப்பாளர் கருதுகிறாராம். இருந்தாலும் இதை அல்லு அர்ஜுனிடம் எப்படி சொல்வது என இயக்குனர் சுகுமார் தயங்கி வருவதாகவும் சொல்லப்படுகிறது.