இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாளத்தில் குறூப், சல்யூட், தமிழில் ஹே ஷினாமிகா என மூன்று படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்ட துல்கர் சல்மான், ஏற்கனவே கொரோனா அலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தெலுங்கு படத்தில் தற்போது நடிக்க துவங்கி விட்டார். மகாநடி படத்தை தொடர்ந்து தெலுங்கில் துல்கர் நடிக்கும் இரண்டாவது படம் இது.
இந்தப்படத்தில் லெப்டினென்ட் ராம் என்கிற ராணுவ அதிகாரியாக துல்கர் சல்மான் நடிக்கிறார். அதனால் தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள துல்கர் சல்மான், அங்குள்ள ஜிம் ஒன்றில் தீவிர பயிற்சி செய்து வருகிறார். அவருடன் கூடவே சகுந்தலம் படத்தில் சமந்தாவின் ஜோடியாக நடித்து வரும் தேவ் மோகன் என்பவரும் ஜிம் கூட்டாளியாக இணைந்துள்ளார். இவர் சூபியும் சுஜாதையும் படத்தில் அதிதி ராவ் காதலனாக அறிமுகமானவர்.
துல்கர் சல்மானும் தானும் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் தேவ் மோகன். தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை ஹனு ராகவபுடி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மும்மொழிகள் தயாராகும் இந்த படம், 1964-ம் ஆண்டில் நடைபெறும் வகையில் ஒரு ப்ரீயட் காதல் கதையாக உருவாகவுள்ளது.