சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை என மக்களை அதிகமாகவே வாட்டி வதைத்தது. இதனால் தங்கள் உடல் நலன் மீது மக்களுக்கு அதிக அக்கறை வந்தது. வாக்கிங் போகாதவர்கள் கூட வாக்கிங் போக ஆரம்பித்தார்கள். உடற்பயிற்சி செய்யாதவர்கள் கூட உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தார்கள்.
இன்னொரு பக்கம் பெட்ரோல் விலை உயர்வும் ஒரு லிட்டருக்கு 100 ரூபாயை கடந்தது. அதன் காரணமாக பழையபடி மக்களும் சைக்கிளில் செல்ல ஆரம்பித்துள்ளனர். இந்த மாற்றமும் ஒரு விதத்தில் நல்லது தான். சைக்கிளிங் செல்வதற்காக தனியாக நேரத்தை ஒதுக்காமல் மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு பதிலாக சைக்கிளில் சென்று வந்தால் அது உடற்பயிற்சியாகவும் மாறிவிடும்.
கடந்த வாரம் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் சைக்கிளிங் பற்றி பதிவிட்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது தமிழ் சினிமாவின் சீனியர் நாயகிகளில் ஒருவரான திரிஷாவும் தன்னுடைய சைக்கிளிங் ஆரம்பித்துள்ளார்.
"இதுதான் என்னுடைய புதிய சைக்கிள். நல்ல மூடுக்கு ஒரு ரைட் போதும்", என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிஷாவை பார்த்து இனி பலரும் சைக்கிளிங் செல்ல ஆரம்பிப்பார்கள்.