சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு ஆராதானா என்ற மகள் உள்ளார். தற்போது இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுப்பற்றி சிவகார்த்திகேயன் டுவிட்டரில், ‛‛18 ஆண்டுகளுக்கு பின் இன்று(நேற்று) என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக...என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்'' என குறிப்பிட்டு தன் அப்பா போட்டோ உடன் பிறந்த குழந்தையின் விரலை தான் பற்றியபடி இருக்கும் ஒரு போட்டோவையும் நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பயதிருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.