தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் |
ஓடிடி தளங்கள், யு டியூப் தளங்களில் வெளியாகும் வீடியோக்களுக்கு சென்சார் வேண்டும் என்று ஒரு பக்கம் குரல்கள் உள்ளன. அது போல சமூக வலைத்தளங்களிலும் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற குரலும் சீக்கிரம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆன்லைன் வகுப்புகளில் சிறுவர்கள், சிறுமியர்கள் பலர் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த சூழலில் அவர்களிடம் மொபைல் போன்கள், கம்ப்யூட்டர்கள் பயன்பாடு அதிகமாகவே இருக்கிறது. அந்த சமயத்தில் சமூக வலைத்தளங்களில் சிலர் வெளியிடும் கிளாமரான, கிளர்ச்சியான புகைப்படங்களைப் பார்க்கவும் வாய்ப்புள்ளது.
சில குறிப்பிட்ட நடிகைகள் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதில் குறிப்பாக பிக்பாஸ் பிரபலங்கள் ஷிவானி, சாக்ஷி அகர்வால் முக்கியமாக இருக்கிறார்கள். இவர்களது புகைப்படங்களுக்கு சென்சார் வைத்தால் கூட தவறில்லை என்றுதான் தோன்றுகிறது.
அவர்களைப் போல பல முன்னணி கதாநாயகிகள் கூட பிகினி, கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நேற்று வெளியிட்ட புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சம். அந்தப் புகைப்படங்களுக்கு 1 மில்லியன் லைக் வந்ததே அதற்கு உதாரணம்.
'மாஸ்டர்' பட நாயகியான மாளவிகா மோகனனும் அவர் பங்கிற்கு ஒரு கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்னும் ஏட்டிக்குப் போட்டியாக எத்தனை பேர் இப்படி புகைப்படங்களை பதிவிடப் போகிறார்களோ ?.