திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழகத்திலும் ஆந்திராவிலும் படப்பிடிப்பு நடத்த, அந்த மாநில அரசுகள் அனுமதித்துள்ளன. இதைத்தொடர்ந்து படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் கேரள அரசு இப்போது வரை அந்த மாநிலத்தில் சினிமா படப்பிடிப்புகளை நடத்துவதற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அதேசமயம் பாரபட்சமாக சீரியல் படப்பிடிப்புகள் நடத்திக்கொள்ள மட்டும் அனுமதி வழங்கியிருக்கிறது.
இதுகுறித்து சினிமா தொழிலாளர் அமைப்பின் தலைவரான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் கேரள முதல்வருக்கு கோரிக்கை வைத்து கடிதம் எழுதியிருக்கிறார். ஆனாலும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதால் மோகன்லால் பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகி வரும் புரோ டாடி உள்பட பெரிய படங்கள் தங்களது படப்பிடிப்பை நடத்துவதற்காக தமிழகம் மற்றும் ஆந்திராவை நோக்கி கிளம்பி விட்டார்கள்.