50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தொடர்ந்து ஜெயம் ரவி, விஜய்சேதுபதி என அடுத்தடுத்து முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ். கைவசம் தமிழிலேயே மூன்று படங்களுக்கு குறையாமல் வைத்துள்ளார். அதுமட்டுமல்ல கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்த அல வைகுந்தபுரம் படத்தில் நடித்த இவர் விரைவில் வெளியாகவுள்ள விராட பர்வம் படத்திலும் சற்று நீட்டிக்கப்பட்ட கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
ராணா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சாய்பல்லவி மற்றும் பிரியாமணி ஆகியோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தில் சாய்பல்லவியும், பிரியாமணியும் நக்சலைட்டாக நடித்துள்ளது போல, நிவேதா பெத்துராஜும் நக்சலைட் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளாராம். வேணு உடுகுலா என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடித்துள்ளார்.