ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் பத்மப்ரியா. அடுத்து சத்தம் போடாதே, மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.. அதேசமயம் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். ஆனால் திருமணம் செய்துகொண்ட பின் வாய்ப்புகள் குறைந்தது. மேலும் மீடூ தொடர்பான விவகாரத்தில் நடிகர் சங்கத்துடன் குறிப்பாக மோகன்லாலுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் சுத்தமாக பட வாய்ப்பே இல்லாமல் போனது.
இந்தநிலையில் தான் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் பத்மப்ரியா.. தற்போது மலையாளத்திலும் பிஜுமேனன் கதாநாயகனாக நடிக்கும் 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் பத்மப்ரியா. இது எழுத்தாளர் இந்துகொபன் எழுதிய 'அம்மினிப்பிள்ள வெட்டு கேஸ்' என்கிற நாவலை தழுவி உருவாகிறது. தற்போது மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி படத்தின் கதாசிரியரான ஸ்ரீஜித், இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.