ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
'விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு கௌதம் மேனன் - சிலம்பரசன் இணையும் படம் 'நதிகளிலே நீராடும் சூரியன்'. இப்படத்திற்கான வேலைகள் இன்று முதல் ஆரம்பமாகிவிட்டன. படத்திற்கான போட்டோஷுட் இன்று நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றி படத்தைத் தயாரிக்கும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை. ஆனால், சிம்பு தற்போது நடித்து முடித்திருக்கும் 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
“டியர் எஸ்டிஆர் ரசிகர்களே, மாநாடு படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் சந்திப்போம். அடுத்த படம் ஆரம்பமாகிவிட்டது. இனிமேல், ஐசரிகணேஷ் அண்ணன் அப்டேட் கொடுப்பார். அண்ணனை பாலோ பண்ணுங்க. ஐசரிகணேஷ் அண்ணன், தம்பி சிலம்பரசன், கௌதம் மேனன் சாருக்கு வாழ்த்துகள். இனி, தம்பி சிலம்பரசன் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் புதிய நாளே. இன்று 'நதிகளிலே நீராடும் சூரியன்' போட்டோ ஷுட்டுடன் ஆரம்பமாகிறது,” என டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.