இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
சூரரைப்போற்று படத்திற்கு பின் பல படங்கள் நடிகர் சூர்யா கைவசம் உள்ளன. கடந்தவாரம் தான் அவர் நடிக்கும் வாடிவாசல் படத்தின் பர்ஸட் லுக் வெளியானது. நேற்று பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிக்கும் 40வது பட தலைப்பான எதற்கும் துணிந்தவன் என்பதை அறிவித்தனர். இந்நிலையில் இன்று அவரின் பிறந்தநாளில் அவரது 39வது பட தலைப்பை அறிவித்துள்ளனர். படத்திற்கு ‛ஜெய்பீம் என பெயரிட்டுள்ளனர்.
த.செ.ஞானவேல் இயக்கும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது. ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், லிஜோமோள் ஜோஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூர்யா வக்கீல் வேடத்தில் உள்ளார். இதை வைத்து பார்க்கும் போது அவர் வக்கீலாக நடிக்கலாம் என தெரிகிறது. அடுத்தடுத்து சூர்யா பட அப்டேட்டால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.