ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் |
சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கிய ‛ஜெய்பீம்' படத்திற்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அந்த படத்துக்கு தேசிய விருது கிடைக்காதது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்திருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கு நடிகர் நானி, ‛ஜெய் பீம்' படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஜெய் பீம் என்ற ஹேஷ்டாக் போட்டு மனசு உடைஞ்சது போன்ற இமோஜியை பதிவிட்டு தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது இயக்குனர் சுசீந்திரனும் அது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், தேசிய விருது வென்ற படங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடைசி விவசாயி படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மகிழ்ச்சி. மிகவும் அற்புதமான படம். இயக்குனர் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள். அதேபோல் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு கருவறை என்ற குறும்படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். இந்த வரிசையில் ஜெய்பீம் படம் மிகவும் முக்கியமானது. ஆனால் இந்த படத்திற்கு விருது கிடைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதற்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.