தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய் ஆண்டனி நடித்த 'மார்கன்' படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் சுசீந்திரன், யூ டியூப்பில் ரிவ்யூ சொல்பவர்களையும் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், ''சமீபத்தில் வெளியான 'டி.என்.ஏ, மார்கன்' படங்களுக்கு ஆரம்பத்தில் நல்ல ரிவ்யூ வரவில்லை. ஆனால் நான் தியேட்டரில் சென்று பார்த்தபோது படம் நன்றாக இருந்தது. சில நாட்களில் படம் பிக்அப் ஆனது. இப்போது சில யூடியூப்பர்கள் தங்கள் வியூஸ், விளம்பர வருமானத்துக்காக தவறான ரிவ்யூ கொடுக்கிறார்கள். சினிமாவில் இருந்து கொண்டே சினிமாவை கொலை செய்கிறார்கள்.
இப்போது ஏகப்பட்ட டீம் வந்துவிட்டது. ஒரு டீம், சார் படத்துக்கு நாமே டிக்கெட் எடுத்து கொடுத்து 100 பேரை அனுப்புவோம். அவங்க வெளியே வரும் போது படம் ஆஹா ஓஹோ என்பார்கள் என ஐடியா கொடுக்கிறார்கள்.. மற்றொரு டீம், தங்களுக்கு வேண்டியதை வாங்கி கொண்டு, தங்களுக்கு வேண்டியவர்களை தியேட்டருக்கு அனுப்பிவிட்டு படத்தை பற்றி தவறாக சொல்ல சொல்கிறார்கள்'' என்றார்.
இப்போது யூ டியூப் விமர்சகர்கள் மீது தமிழ் சினிமாவில் கடும் விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. விமர்சனம் செய்ய கூடாது என்று தயாரிப்பாளர் சங்கம் வழக்கு தொடுத்தது. ஆனால் கோர்ட் அந்த வழக்கை தள்ளுபடி செய்து விட்டது. இதனால் போலியாக ஒரு படத்தை பற்றி ஆஹா ஓஹோ என சொல்லவோ, மட்டம் தட்டி பேசுவது போன்றோ விமர்சனம் செய்வோரை தடுக்க முடியாது, கட்டுப்படுத்தலாம் என சிலர் யோசனை தெரிவிக்கின்றனர்.