தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சென்னை சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதியை, சில நாட்களாக தொகுதிக்குள் காண முடியவில்லை என்பதால், தொகுதி மக்கள் பலரும், கோரிக்கை மனுக்களோடு அவரது வீடு தேடி சென்றனர். மனுக்களை பெற்ற உதயநிதி குடும்பத்தினரும், தி.மு.க,வினரும், 'எம்.எல்.ஏ., படப்பிடிப்புக்கு போயிருக்காரு. சில நாட்களில் வந்துடுவாரு. உங்களை நேரில் சந்திப்பாரு'ன்னு கூறி அனுப்புகின்றனர்.
இப்படி தினமும், வீட்டுக்கே மனுக்கள் வருவது, உதயநிதியின் தந்தையும், முதல்வருமான ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. அதையடுத்து, உதயநிதியிடம் பேசிய ஸ்டாலின், 'கட்சி வேலையும், எம்.எல்.ஏ., பொறுப்பும் அதிகமாக இருக்க, தொடர்ந்து ஏன் நடிக்கிறாய்' என, கேட்டுள்ளார். 'நடித்தது போதும்; தீவிரமாக அரசியல் வேலையை பார்' என்றும் கூறியுள்ளார். இதனால், தற்போது நடித்து வரும், மூன்று படங்களை விரைவாக முடித்து விட்டு, அதன்பின், சினிமாவுக்கு தற்காலிகமாக முழுக்கு போட, உதயநிதி திட்டம் போட்டுள்ளார்.
இதுகுறித்து, உதயநிதி ஆதரவாளர்கள் கூறியதாவது: மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிக்கிறார். அந்த படத்துக்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இருந்தாலும், 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களுக்குள், மொத்த படமும் முடிந்து விடும்.அடுத்து, 'கனா' பட இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும், 'ஆர்டிக்கிள் 15' என்ற, மொழி மாற்று படத்தில், உதயநிதி நடிக்க உள்ளார். இதையடுத்து, இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளார்.
சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்குவதற்கு முன், ரசிகர்கள் பலருக்கும் பிடித்த, ஒரு சிறந்த படமாக, மாரி செல்வராஜ் படம் இருக்கும் என, உதயநிதி நம்புகிறார். மாரி செல்வராஜ் படத்தை முடித்த பின், முழு நேரமும் அரசியல் பணியில், உதயநிதி கவனம் செலுத்துவார். அதிகபட்சம், நான்கு மாதம் மட்டுமே, சினிமா நடிகராக உதயநிதி இருப்பார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.