தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
மாயா, டோரா, ஐரா, நிழல்(மலையாளம்) உள்ளிட்ட த்ரில்லர் படங்களில் நடித்த நயன்தாரா மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்புகள் சத்தமின்றி தொடங்கி உள்ளது. வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்குகிறார். அவர் சொன்ன கதை நயன்தாராவுக்கு மிகவும் பிடித்து விடவே மற்ற படங்களில் இருந்து தேதி வாங்கி இந்த படத்திற்கு தேதி கொடுத்திருக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. 2வது கட்ட படப்பிடிப்பு கோவையை சுற்றி நடக்கிறது. மாயா படத்திற்கு இசை அமைத்த ரான் ஈதன் யோஹன் இதற்கு இசை அமைக்கிறார். தமிழ் ஒளிப்பதிவு செய்கிறார்.