பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
ராஜமவுலி இயக்கத்தில், கீரவானி இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய்தேவகன், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. அதனுடன் படத்திற்கான பிரமோஷன் பாடல் ஒன்றையும் 5 மொழிகளில் வெளியிட உள்ளார்கள். அது பற்றிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அப்பாடல் வெளியாக உள்ளது. அதற்கான படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தமிழில் அப்பாடலை இளம் இசையமைப்பாளரும், பாடகருமான அனிருத் பாட உள்ளார். அதற்காக சென்னை வந்து அவரைச் சந்தித்து சில தினங்களுக்கு முன்பு அது பற்றி பேசியுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் கீரவானி.
சென்னையில் இசையமைப்பாளர் இளையராஜாவைச் சந்தித்து அவருடன் உரையாடியது பற்றிய புகைப்படங்களை வெளியிட்ட கீரவானி, அன்று இரவே அனிருத்துடனான சந்திப்பு பற்றியும் டுவிட்டரில் பதிவிட்டார்.
“ஆர்ஆர்ஆர்' படத்திற்காக அனிருத்துடன் சிறப்பான சந்திப்பு நடந்தது. செயல்திறன், ஆற்றல், திறமை மற்றும் அவரது அற்புதமான குழுவினர் அவரது முக்கிய சொத்துக்கள். எல்லாவற்றிற்கும் மேலாக மிகவும் பணிவானவர்” என அனிருத் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அந்த சந்திப்பு குறித்த புகைப்படம் எதையும் அவர் வெளியிடவில்லை.