ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? |
கடந்த சில தினங்களுக்கு முன்பு மகாபலிபுரம் அருகில் தனது நண்பர்களுடன் கார் ஓட்டி வந்த நடிகை யாஷிகா ஆனந்த், நிலை தடுமாறியதால் அந்த கார் விபத்துக்கு உள்ளானது. இதில் யாஷிகாவின் தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், யாஷிகா அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதோடு தோழியின் மரணத்துக்கும் காரணமாகி விட்டதால் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதோடு அவரது ஓட்டுனர் உரிமத்தையும் ரத்து செய்துள்ளனர்.
இந்தநிலையில் தற்போது யாஷிகாவின் தாயார் சோனல் ஆனந்த் மகளின் உடல்நிலை குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், யாஷிகா ஆனந்தின் கால், இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு, யாஷிகாவின் தோழி இறந்த செய்தி அவருக்கு இன்னமும் தெரியாது. அதை தெரிவிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறி விட்டனர். அதனால் தோழி குறித்து யாஷிகா கேட்டபோது, அவரும் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லியிருக்கிறோம். மேலும், யாஷிகா ஆனந்திற்கு நடக்கும் அறுவை சிகிச்சைக்குப்பிறகு இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் அவரால் நடக்க முடியும். மூன்று மாதம் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் அவரது தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.