இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
ஒரு காலத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகைகள் அளிக்கும் பேட்டிகளில் ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் தங்களது கனவு என்பார்கள். அதன்பிறகு வந்தவர்கள் விஜய், அஜித்துடன் நடிக்க வேண்டும் என்றார்கள். ஆனால் தற்போது அது கொஞ்சம் மாறி உள்ளது.
விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து வந்தபோது தனுசுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது என்று கூறி வந்தார் மாளவிகா மோகனன். அவர் ஆசைப்பட்டது போலவே உடனடியாக தனுஷின் 43ஆவது படத்தில் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்து விடடது.
இந்தநிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து ஓடிடியில் வெளியாகியுள்ள சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்துள்ள துஷாரா விஜயனும் தனுசுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது எனது பெரும் கனவாக உள்ளது என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அதோடு தனுஷின் பர்பாமென்ஸ் பற்றியும் தனது வியப்பினை வெளிப்படுத்தியுள்ளார்.
மாளவிகா மோகனனின் கனவு நனவானதைப்போன்று துஷாராவின் கனவும் நனவாகுமா?