இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சார்பாட்டா படத்தில் கமெண்ட்ரி கொடுக்கும் ரோலில் நடித்திருந்த டைகர் கார்டன் தங்கதுரை, சிறப்பாக பெர்பார்ம் செய்திருந்தார்.
தமிழில் வரும் ஸ்போர்ட்ஸ் படங்களில் கமெண்ட்ரி ரோல் செய்யும் நபர்களுக்கு படத்திலேயே பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அப்படியே சில படங்களில் முக்கியத்துவம் கொடுத்தாலும் திரையில் பெரும்பாலும் அவர்கள் காண்பிக்கப்படாததால் அந்த நபர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதும் அரிது தான். ஆனால், எந்த வகையான விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் ஆட்டக்களத்தை உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள் கமெண்டேட்டர்கள் தான். அது போல ஒரு படத்தின் விளையாட்டு காட்சியை அதே உணர்ச்சிகளோடு பார்வையாளர்களிடம் கடத்துபவர்களும் இவர்களே.
உதாரணத்திற்கு ஆடுகளம் படத்தை எடுத்துக் கொண்டல் சேவல் சண்டையிடும் களத்தை காட்டும் போதெல்லாம் அல்வா வாசுவின் மதுரை தமிழ் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த அளவுக்கு போட்டி நடக்கும் காட்சியை, நிஜ களத்தில் நின்று பார்ப்பது போன்ற உணர்வை அல்வா வாசு நமக்கு தந்திருப்பார்.
அது போலவே, தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சார்பட்டா படத்திலும் பாக்ஸிங் களத்தை நமக்கு லைவ்வாக காட்டுகிறார் டைகர் கார்டன் தங்கதுரை. சென்னை தமிழில் காட்சிக்கு ஏற்றார் போல், ஒட்டுமொத்த சண்டைக் காட்சிகளிலுமே அவரது குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. முந்தைய படங்களில் காமெடிக்காக அவர் கொடுத்த கமெண்ட்டுகள் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும், சார்பட்டா படத்தில் அவரின் கமெண்ட்ரி பாராட்டுகளை பெறுகிறது.
இருப்பினும் இதற்கான அங்கீகாரம் தங்கதுரைக்கு கிடைத்ததா என்றால் வழக்கம் போல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.