சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழில் தான் இயக்கி வந்த 'இந்தியன் 2' படம் நீதிமன்ற வழக்கில் இருப்பதால் அப்படத்தை அப்படியேவிட்டுவிட்டு, தெலுங்கில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்கப் போய்விட்டார் ஷங்கர். அப்படத்தின் ஆரம்பக் கட்ட வேலைகளை தற்போது ஐதராபாத்தில் செய்து வருகிறார். படத்திற்கான பாடல் பதிவுகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இன்று படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 2016ல் வெளிவந்த 'எம்எஸ் தோனி' படம் மூலம் பிரபலமானவர் கியாரா. தொடர்ந்து சில தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது 'ஷெர்ஷா' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். 'பூல் புலையா 2, ஜக் ஜக் ஜீயோ, மிஸ்டர் லீலி' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார்.
ஷங்கர், ராம்சரண் முதல் முறையாக இணையும் புதிய தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அடுத்து ஷங்கர் ஹிந்தியில் இயக்க உள்ள 'அந்நிய்ன' படத்தின் ரீமேக்கிலும் கியாராதான் கதாநாயகி என்று ஏற்கெனவே செய்திகள் வெளி வந்துள்ளன. இரு படங்களுக்காகவும்தான் கியாராவை ஒப்பந்தம் செய்துள்ளார் ஷங்கர் என்கிறார்கள்.