பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழியில் உருவாகும் படம் ஒன்றை இயக்குனர் ஸாக் ஹாரிஸ் என்பவர் இயக்கி வருகிறார். இதில் தமிழில் நட்டி எனும் நட்ராஜ் சுப்ரமணியம் மற்றும் கதிர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மலையாளத்தில் இதே கேரக்டர்களை ஜோசப் புகழ் ஜோஜு ஜார்ஜ் மற்றும் பிரேமம் புகழ் ஷராபுதீன் இருவரும் ஏற்று நடிக்கின்றனர். கதாநாயகியாக கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா நடிக்கின்றனர்.
இரண்டு மொழிகளுக்கும் பொதுவான கதாபாத்திரங்களில் நரேன், ஜான் விஜய், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் இருமொழியில் படமானாலும் இதன் தமிழ் பதிப்பு சென்னையிலும், மலையாள கதை கொச்சியிலும் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் படபிடிப்பை முடித்த படக்குழுவினர் கடைசி நாளன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.