இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் எங்கேயோ இருக்க வேண்டியவர் என்ற வரிகளுக்கு பொருத்தமான சொந்தக்காரர் சிலம்பரசன். சிறு வயதிலிருந்தே அவருக்கிருக்கும் திறமைகளை வைத்து அவர் எங்கேயோ உச்சத்தில் இருக்க வேண்டியவர் என்று திரையுலகில் பலரும் சொல்வார்கள்.
அடுத்தடுத்த காதல் தோல்வி, படப்பிடிப்பிற்கு சரியாக வர மாட்டார் என்ற தகவல்கள் அவருடைய சினிமா வாழ்க்கையில் தடைக்கற்களாக அமைந்தன. ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்த 'செக்கச் சிவந்த வானம்' படத்திற்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பு அவர் மீதான விமர்சனங்களை தகர்த்தெறிந்தது.
அடுத்து 'ஈஸ்வரன், மாநாடு' ஆகிய படங்களை திட்டமிடப்பட்ட நாட்களில் சிலம்பரசன் முடித்துக் கொடுத்தார் என்பது திரையுலகினருக்கு ஆச்சரியம் கலந்த செய்தி. மீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் 'நதிகளிலே நீராடும் சூரியன்,' படத்திலும், கன்னடத்திலிருந்து ரீமேக் ஆக உள்ள 'பத்துதல' படத்திலும் நடிக்க உள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் சரியான இடைவெளியில் தன் ரசிகர்களுக்காக ஏதோ ஒரு அப்டேட்டைக் கொடுப்பவர் சிலம்பரசன். தீவிர சிவ பக்தரான சிலம்பரசன், சில தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள முருதீசுவரர் திருக்கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டார். பிரம்மாண்ட சிவன் சிலை முன்பு நின்று தரிசனம் செய்யும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து 'நன்றி இறைவா, ஓம் நமச்சிவாயா'' என்ற வாசங்களுடன் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
எதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் என்பதற்கான காரணம் விரைவில் தெரிய வரும்.