லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
விஜய் நடித்த பிகில் படம் சமீபத்தில் வெளிவந்தது. ஆனால் கல்லூரி காலத்தில் நான் தான் பிகில் என்கிறார் சூர்யா. லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முன்னாள் மாணவர் என்கிற முறையில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்த நிகழ்ச்சி மூலம் என் கல்லூரி நண்பர்களை மீண்டும் ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. எனது கல்லூரி கால இனிமையான நினைவுகள் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. கல்லூரி காலத்தில் எனக்கு பாடத் தெரியாது. ஆனால் பாடல்களை விசில் மூலம் வெளிப்படுத்துவேன். கல்லூரி விழாக்களில் எனது விசில் தான் சத்தமாக கேட்கும். அதனால் எல்லோரும் என்னை பிகில் என்று பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள். அப்படி அழைத்த பலர் இங்கே இருக்கிறார்கள். என்றார்.