ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
விக்ரமும், அவரது மகன் துருவ்வும் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பை டார்ஜிலிங் பகுதியில் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இதற்காக துருவ் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் 90 பேர் சென்னையில் இருந்து விமானத்தில் டார்ஜிலிங் புறப்பட்டு சென்றனர். விமானம் புறப்பட்ட 55வது நிமிடத்தில் அது கடல் மீது பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானத்தில் அதிர்வு உண்டானது.
இதனால் பயணிகள் அனைவரும் பயந்தனர். விமானம் தொடர்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை மீண்டும் சென்னைக்கே திருப்பினார்கள். இதனால் அனைவரும் பத்திரமாக சென்னை வந்து சேர்ந்தனர். அதன்பிறகு மறுநாள் இன்னொரு விமானத்தில் படக் குழுவினர் டார்ஜிலிங் சென்று சேர்ந்தனர்.