ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ்ராய்ஸ் காரை இறக்குமதி செய்தார். இதற்கு நுழைவு வரிவிலக்கு கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ல் தீர்ப்பளித்தது. வெளிநாட்டு இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட்டு தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், நடிகர் தனுஷும் தனது இறக்குமதி காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி 2015ல் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு முன்னதாக உத்தரவிட்டது. இன்று இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது வாதத்தில் தனுஷ் ஏற்கனவே 50 சதவீத நுழைவு வரியை செலுத்திவிட்டதாகவும் பாக்கி வரியை செலுத்த தயாராக இருப்பதாகவும் எனவே வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்ள அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
தனுஷ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி தனது உத்தரவில் கூறியிருப்பதாவது, வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு மனுதாரர் கேட்டுள்ளார். ஆனால் மனுவில் மனுதாரர் தான் யார் என்பதையும் தனது தொழிலையும் குறிப்பிடவில்லை. அவரது ஆண்டு வருமானமும் குறிப்பிடப்படவில்லை. ஏன் இதை மறைக்க வேண்டும்? பணியையோ தொழிலையோ குறிப்பிடுவது அவசியம் இல்லையா? ஏற்கனவே நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2019ஆம் ஆண்டே தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக நுழைவு வரியை செலுத்தாமல் இருக்க உள்நோக்கம் என்ன? வரி செலுத்தக்கூடாது என்று தானே? மக்களிடம் வசூலிக்கும் வரியில் போடப்பட்ட சாலையை தானே மனுதாரர் இத்தனை ஆண்டுகளாக பயன்படுத்துகிறார்? தன்னுடைய மோட்டார் சைக்கிளை வைத்து பால் வியாபாரம் செய்யும் பால்காரர் அந்த வாகனத்துக்கு பெட்ரோல் போட்டு ஜிஎஸ்டி வரி கட்டுகிறார். அவர் தன்னால் பெட்ரோலுக்கு வரி கட்ட முடியவில்லை என்று வழக்கு தொடர்வதில்லை. ஏழைகள் முறையாக வரி செலுத்துகிறார்கள். பணக்காரர்களும் பிரபலங்களும் தான் தங்கள் வரியை செலுத்துவதில்லை. விலக்கு கேட்கிறார்கள். மனுதாரர் தானே உணர்ந்து வரியை செலுத்தி இருக்கவேண்டும்.
நீங்கள் எத்தனை கார்கள் வேண்டுமானாலும் வாங்குங்கள். ஆனால் அவற்றுக்கான வரியை செலுத்துங்கள். இந்த வழக்கை மதியம் 2.15 மணிக்கு தள்ளி வைக்கிறேன். தமிழக வணிகவரித்துறை அதிகாரிகள் அதற்குள் மனுதாரர் கட்டவேண்டிய பாக்கி வரித்தொகையை கணக்கிட்டு கூறவேண்டும். மனுதாரர் அந்த தொகையை செலுத்த உத்தரவிடப்படும்.'. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
இதே நீதிபதி தான் சொகுசு காருக்கு நுழைவு வரி கேட்ட நடிகர் விஜய்யின் வழக்கில் விஜய்யை கடுமையாக விமர்சித்ததோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.