தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா முதல் அலை தாக்கத்தின் போது ஒரு பக்கம் சில புதிய படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகின. அவற்றோடு சில முக்கிய சினிமா பிரபலங்களைத் தேடிப் பிடித்து சில ஓடிடி தளங்கள் ஆந்தாலஜி வகைப் படங்களை எடுக்க வைத்தன. அந்த விதத்தில் கடந்த வருடத்தில் ஓடிடி தளங்களில் புத்தம் புது காலை, பாவக் கதைகள் ஆகிய இரண்டு ஆந்தாலஜி படங்கள் வெளிவந்தன. இரண்டுமே ரசிகர்களின் பொறுமையை நிறையவே சோதித்தன.
5 கதைகள் கொண்ட புத்தம் புது காலை ஆந்தாலஜி படத்தை சுதா கோங்கரா, கவுதம் மேனன், சுஹாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் இயக்கினார்கள். 4 கதைகள் பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தை சுதா கோங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இயக்கினார்கள். இரண்டிலுமே தமிழ் சினிமாவில் உள்ள சில முக்கிய முன்னணி நட்சத்திரங்கள் நடித்தார்கள்.
ஓடிடி தளங்களுக்கு சந்தாதாரராக இருக்கும் பலரும் இவற்றைப் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். சிலர் பார்க்க ஆரம்பித்து பாதியில் நிறுத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு விறுவிறுப்பில்லாத, அவார்டுகளுக்காக உருவாக்கப்படும் சில சினிமாப் படங்களைப் போல அவை இருந்தன. அதனால், ஆந்தாலஜி படம் என்றாலே ஓடிடி சந்தாதாரர்கள் தொலை தூரம் ஓடும் சூழல் ஏற்பட்டது.
ஓடிடி தளத்தில் அடுத்த ஆந்தாலஜி வெளியீடாக மணிரத்னம், ஜெயேந்திரா தயாரித்துள்ள நவரசா நாளை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை பிரியதர்ஷன், வசந்த், கவுதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்பராஜ், சர்ஜுன் கேஎம், கார்த்திக் நரேன், அரவிந்த்சாமி, ரதீந்திரன் ஆர் பிரசாத் ஆகியோர் இயக்கியுள்ளார்கள். இதிலும் சில முன்னணி முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
நவரசா டிரைலரைப் பார்த்த போது முந்தைய ஆந்தாலஜி படங்களைப் போல இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. அதையும் மீறி நவரசா படத்திற்கு புதிய ரசனையை மணிரத்னம் அன்ட் கோ சேர்த்திருப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. அது நாளை இந்நேரம் தெரிந்துவிடும்.