பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

யாஷிகா ஆனந்த் சில நாட்களுக்கு முன்பு யாஷிகா நள்ளிரவில் நண்பர்களுடன் அதிவேகமாக காரில் பயணித்து வந்த போது கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகியது. அதில் யாஷிகாவின் நண்பர் வள்ளிச் செட்டி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவரது ஆண் நண்பர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் யாஷிகாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அறுவை சிகிச்சை உள்ளாக்கப்பட்டார். தற்போது யாஷிகா உடல்நலம் தேறி வருகிறார்.
இந்நிலையில் யாஷிகாவுக்கு அறிவுரை கூறியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். அதில் "டார்லிங் இது யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். எனவே தான் நாம் இதை விபத்து என்கிறோம். ஜனனம் மற்றும் மரணம் இரண்டும் முன்பே தீர்மானிக்கப்பட்டது. யாரும் அதை மாற்ற முடியாது. எனவே நீயும் விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளாய். உனது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு சம்பவத்திற்கு உன்னை நீயே குற்றம் சொல்வதை முதலில் நிறுத்து. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி நினைப்பதை நிறுத்திவிடு. உன் மனசாட்சியை உறுதியாக வைத்துக் கொள். மற்றவற்றை நீயே கவனித்துக் கொள்ளலாம். இந்த கோர விபத்தில் இருந்து நீ தப்பித்து இருக்கிறாய் என்றால் அதற்கு காரணம் இருக்கிறது. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று தெரிவித்துள்ளார்.