உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் |

தமிழ் இயக்குனரான ஷங்கர், தெலுங்கில் ராம் சரண் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். தமன் இசையமைக்க கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் வேலைகளுக்காக ஷங்கர் ஐதராபாத்திலேயே தங்கியுள்ளார். பாடல் பதிவு, முன் பணி தயாரிப்பு வேலைகள் என பிஸியாக இருக்கிறார்.
இப்போது படத்தைப் பற்றிய புதிய அப்டேட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரே மூச்சில் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுவிட்டதாம். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்து, அடுத்த வருட ஜுலைக்குள் அனைத்து வேலைகளையும் முடித்து தயாரிப்பாளரிடம் படத்தை ஒப்படைத்துவிடுவாராம் ஷங்கர். படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகளை தெலங்கானா மாநிலத்திலேயே தான் படமாக்க உள்ளார்களாம். பாடல் காட்சிகளுக்கு வேண்டுமானால் வெளிநாடுகள் செல்ல வாய்ப்பிருக்கிறது.
ஷங்கர் இந்தப் படத்திற்கான திட்டமிடலைச் சரியாக செய்திருந்தாலும், 'இந்தியன் 2' விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பைப் பொறுத்து ராம் சரண் படத்திற்கான படப்பிடிப்பில் மாற்றம் நிகழவும் வாய்ப்புள்ளது.