தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சினிமா தயாரிப்பில் இப்போது பல நடைமுறைகள் மாறிவிட்டன. தங்களது படம் பற்றிய தகவல்கள் எப்படியாவது 'லீக்' ஆகிவிடக் கூடாது என்பதற்காக பல பாதுகாப்பு வழிமுறைகளை படக்குழுவினர் பின்பற்றுகிறார்கள்.
அவற்றில் ஒன்று அலுவலகங்களில் அணிவதைப் போன்ற ஐ.டி. கார்டு. படக்குழுவில் உள்ள இயக்குனர் முதல் லைட்மேன், உதவியாளர்கள் வரை அனைவருக்கும் அவர்களது பெயர், செய்யும் வேலை ஆகியவற்றுடன் புகைப்பட ஐ.டி கார்டுகள் வழங்கப்படுகிறது. இதனால், படக்குழுவிற்கு சம்பந்தமில்லாமல் யாராவது அரங்கிற்குள் நுழைந்தால் அவர்களைத் தடுக்க வசதியாக இருக்கிறது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது உக்ரைன் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்புத் தளத்தில் ஐ.டி. கார்டு அணிந்து ஜுனியர் என்டிஆர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பக்கத்தில் இயக்குனர் ராஜமவுலியும் அவருடைய ஐ.டி. கார்டை எடுத்துக் காட்டுவதும் புகைப்படத்தில் உள்ளது.
அது குறித்து இன்ஸ்டாவில், “பல வருடங்களுக்குப் பிறகு ஐ.டி கார்டு அணிகிறேன். செட்டில் முதல் முறை..,” எனக் குறிப்பிட்டுள்ளார். கல்லூரியில் படித்ததற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் ஐ.டி கார்டு அணிகிறார் போலிருக்கிறது.