தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாள் ஆகஸ்ட் 9-ம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தனது பிறந்த நாளில் ரசிகர்களை பசுமை இந்தியா சவாலில் பங்கேற்பதை பார்க்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை கொண்டாட எனது பிறந்தநாளில் தலா 3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பதிவுகளை எனக்கும் டேக் செய்யுங்கள். அப்போதுதான் நான் அதை பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார் மகேஷ்பாபு.
தற்போது மகேஷ்பாபு நடித்து வரும் சர்காரு வாரிபாட்டா படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் திரைக்கு வருகிறது.