இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. சுதந்திரப் போராட்ட காலத்து கதையாக உருவாகி வரும் இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு தற்போது உக்ரைன் நாட்டில் நடைபெற்று வருகிறது.
அக்டோபர் மாதம் 13ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான பிரமோஷன்களை படக்குழு ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் 'நட்பு' என்ற தலைப்பில் ஐந்து மொழிகளில் ஒரு பிரமோஷன் வீடியோவை வெளியிட்டார்கள்.
அடுத்து ஆர்ஆர்ஆர் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் பொறுப்பை இன்று முதல் ஜுனியர் என்டிஆர் ஏற்றுக் கொள்கிறார். அதில் அவரது பட அனுபவங்களையும், சில தகவல்களையும் அவர் வெளியிட உள்ளார். அடுத்த சில நாட்களுக்கு இது தொடர உள்ளதாம். அதற்கடுத்து ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்கள் அதைச் செய்ய உள்ளார்களாம்.
'பாகுபலி' படத்திற்கு பல புதுவிதமான பிரமோஷன்களைச் செய்து அந்தப் படத்தை 1000 கோடி ரூபாய்க்கு அதிகமான வசூலைப் பெற்றார்கள். இப்போது 'ஆர்ஆர்ஆர' படத்திற்கு இன்னும் புதிதான பிரமோஷன்களைச் செய்து ரசிகர்களைக் கவர உள்ளார்கள். 'பாகுபலி' படத்தை விட 'ஆர்ஆர்ஆர்' படத்தை அதிக வசூல் ஈட்டச் செய்ய வேண்டும் என்பது படக்குழுவின் அதிகபட்ச ஆசை என்கிறார்கள்.