பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் நாயாட்டு என்கிற படம் ஒடிடி தளத்தில் வெளியானது. குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் கதாநாயகியாக நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்தப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. போலீஸ்காரர்களிலேயே ஒரு சிலர் தெரியாமல் ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டால், அதுவரை நண்பர்களாக இருந்த சக போலீஸ் அதிகாரிகளே அரசு எந்திரத்தின் உத்தரவுப்படி அவர்களை எப்படி வேட்டையாடுகின்றனர் என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது.
இந்தநிலையில் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை ஜான் ஆபிரஹாமும், தமிழ் ரீமேக் ரைட்ஸை இயக்குனர் கவுதம் மேனனும் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த்தும் வாங்கியுள்ளனர். தெலுங்கில் சூட்டோடு சூடாக நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இதில் பெண் போலீஸாக அஞ்சலி நடிக்கிறார். சக போலீஸ்காரர்களாக ராவ் ரமேஷ் மற்றும் சத்யதேவ் இருவரும் நடிக்க இருக்கிறார்களாம்.