தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் நாயாட்டு என்கிற படம் ஒடிடி தளத்தில் வெளியானது. குஞ்சாக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் கதாநாயகியாக நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்திருந்த இந்தப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. போலீஸ்காரர்களிலேயே ஒரு சிலர் தெரியாமல் ஒரு சிக்கலில் சிக்கிக் கொண்டால், அதுவரை நண்பர்களாக இருந்த சக போலீஸ் அதிகாரிகளே அரசு எந்திரத்தின் உத்தரவுப்படி அவர்களை எப்படி வேட்டையாடுகின்றனர் என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது.
இந்தநிலையில் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் ரைட்ஸை ஜான் ஆபிரஹாமும், தமிழ் ரீமேக் ரைட்ஸை இயக்குனர் கவுதம் மேனனும் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த்தும் வாங்கியுள்ளனர். தெலுங்கில் சூட்டோடு சூடாக நடிகர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இதில் பெண் போலீஸாக அஞ்சலி நடிக்கிறார். சக போலீஸ்காரர்களாக ராவ் ரமேஷ் மற்றும் சத்யதேவ் இருவரும் நடிக்க இருக்கிறார்களாம்.