திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
வளர்ந்து வரும் இளம் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் அவரது 19வது படத்தை லிங்குசாமி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்க, ஆதி வில்லனாக நடிக்கின்றார். நதியா மற்றும் ஜெய பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆதியின் ஜோடியாக அக்ஷரா கவுடா நடிக்கிறார்.
இப்படத்தின் இந்தி சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் 16 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. நடிகர் ராம் பொத்தினேனி நடித்த படங்களில் அதிக விலைக்கு இந்தி சாட்டிலைட் விற்கப்பட்ட படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் தமிழ் சாட்டிலைட் உரிமையை பெற பிரபல தொலைக்காட்சி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஏற்கெனவே இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை மாஸ்டர் பீஸ் நிறுவனம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.