வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 2021-2023ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று பிரசாத் லேப்பில் நடந்தது. இதில் டைமண்ட் பாபு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
அவரது அணியை சேர்ந்த வீ.கே. சுந்தர், துணை தலைவராகவும், யுவராஜ் செயலாளராகவும், கணேஷ்குமார், முத்துராமலிங்கம் இணை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எதிர் அணியை சேர்ந்த கோவிந்தராஜ் துணை தலைவராகவும், குமரேசன் பொருளாளராகவும் தேர்வு பெற்றார்கள்.
இவர்கள் தவிர ஆறுமுகம், புவன், தர்மா, இனியன், கிளாமர் சத்யா, சாவித்ரி, ராஜேஷ்,வெங்கட், திரைநீதி செல்வம். ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். மூத்த மக்கள் தொடர்பாளர்கள் விபி மணி, கண்ணதாசன், பாரிவள்ளல் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினார்கள்.