ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழில் கேடி படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு பையா, அயன், சுறா, சிறுத்தை, வீரம், தேவி, பாகுபலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் தமன்னா. தெலுங்கு, இந்தியிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழில் டீகே இயக்கும் திகில் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதுதவிர சீட்டிமார், கஹானி, மேஸ்ட்ரோ உள்ளிட்ட 5 தெலுங்கு படத்திலும், பிளான் ஏ பிளான் பி, போலே சுடியன் என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா இத்தனை பிசியான வாழ்க்கைக்கு இடையிலேயும் தற்போது புதிதாக புத்தகம் எழுதி எழுத்தாளராகவும் மாறி இருக்கிறார். அவர் எழுதியிருக்கும் புத்தகத்தின் பெயர் பேக் டு ரூட் (வேர்களை தேடி). பண்டைய கால இந்திய மக்களின் வாழ்க்கை முறைகள் மூலம் நோய்களை தடுத்து ஆயுட் காலத்தை நீட்டிக்கும் வழி முறைகள் குறித்து புத்தகத்தில் அவர் எழுதி உள்ளார். அவருடன் இணைந்து லூக் கவுண்டினோகோ என்பவரும் எழுதியிருக்கிறார்.
இதுகுறித்து தமன்னா கூறியிருப்பதாவது: இது நான் எழுதிய முதல் புத்தகம் என்பதால் அதிக மக்களை சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த புத்தகத்தின் மூலம் நமது பழங்கால மக்களின் வாழ்க்கை முறைகளை மக்கள் புரிந்து கொள்வார்கள். வேகமான இன்றைய உலகத்தில் மக்கள் கலாசார பண்பாட்டை அறிந்து கொள்வது முக்கியம். என்கிறார்.