விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு |

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தற்போது பார்த்திபன் இயக்கத்தில் 'ஒத்த செருப்பு' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி நடந்து வருகிறது. படப்பிடிப்பில் அபிஷேக் பச்சனுக்கு விபத்து ஏற்பட்டு அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்தார்.
இது குறித்து அபிஷேக் பச்சன் இன்ஸ்டாகிராமில், “சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் கடந்த புதன்கிழமை எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டது. எனது வலது கையில் காயம் ஏற்பட்டது. அதைச் சரி செய்ய அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. உடனே மும்பை திரும்பி, அறுவை சிகிச்சை செய்தேன். எல்லாம் சரி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்னை திரும்பினேன். அது நடந்தே ஆக வேண்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்
படப்பிடிப்பில் ஒரு மேஜையில் அவர் ஓங்கி அடிப்பது போன்ற உணர்ச்சி பூர்வமான காட்சி ஒன்று படமாகும் போது யதார்த்தமாக வர வேண்டும் என்பதற்காக உண்மையிலே ஓங்கி அடித்துவிட்டாராம். கொஞ்சம் கனமான மேஜை என்பதால் அது அபிஷேக்கின் கையை நன்றாகவே பதம் பார்த்துவிட்டது என்கிறார்கள்.
கையில் தற்போது பெரிய கட்டுடன் அபிஷேக் இருந்தாலும், திரைக்கதையில் அந்த கையுடனே அவர் நடிப்பது போன்று காட்சியை மாற்றிவிட்டார்களாம். ஓ....இதுதான் யதார்த்தமான திரைக்கதையோ...?.