தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சந்தானத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வரும் வருகிறார் யோகிபாபு. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடிப்பவர் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டில் திருமணம செய்து கொண்ட யோகிபாபுவிற்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சில முக்கிய ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்த யோகிபாபு, தற்போது தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் நகரம் பேடு என்ற தனது சொந்த கிராமத்தில் வாராஹி அம்மனுக்கு ஒரு கோயில் கட்டியுள்ளார். இந்த கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் அந்த கிராமத்தை சேர்ந்த அனைத்து மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.