ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் ஒருங்கிணைந்து ரெய்ன் ஆன் பிலிம்ஸ் என்ற கூட்டு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். மணிரத்னம், சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், மிஸ்கின், லிங்குசாமி, சசி, கவுதம் மேனன், வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் இதில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் முதல் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்ற தகவல் வெளியானது. அவரது படத்தில் சூர்யா நடிக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல்.
லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். சூர்யா வெற்றி மாறனின் வாடிவாசல், பாண்டிராஜின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். இருவரும் தங்கள் கமிட்மெண்டுகளை முடித்துவிட்டு இந்த படத்தை தொடங்க இருக்கிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் ஏற்கெனவே சூர்யாவிடம் சொல்லி ஓகே ஆகியிருந்த கதை இது. முதலில் இதனை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இப்போது ரெயின் ஆன் பிலிம்சுக்கு மாறி உள்ளது. என்கிறார்கள். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.