இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இம்சை அரசன் 24ம் புலிகேசி படம் விவகாரம் தொடர்பாக நடிகர் வடிவேலு - இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க தடை விலகியுள்ளது ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
இதுப்பற்றி வடிவேலு அளித்த ஒரு பேட்டியில், ‛‛இது எனக்கு மறுபிறவி. மீண்டும் சினிமாவில் நான் தோன்றப் போவது முதன் முதலில் நான் வாய்ப்பு தேடும் போது ஏற்பட்ட உணர்வு ஏற்பட்டுள்ளது. சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் படத்தில் நடிக்கிறேன். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. லைகா சுபாஷ்கரன் மூலம் எனக்கு மறுவாழ்வு ஏற்பட்டுள்ளது. லைகா நிறுவனத்திற்கு 5 படங்கள் நடிப்பேன். ஏன் 10 படங்களில் கூட நடிப்பேன். என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள். முதல்வரை சந்தித்ததும் எனக்கு நல்ல காலம் பிறந்தது'' என்றார்.