ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பொதுவாக முன்னணியில் இருக்கும் இரண்டு கதாநாயகிகள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது என்பது அபூர்வமான ஒரு விஷயம். அப்படியே நடித்தாலும் ஒருவர் பிளாஷ்பேக்கில் மட்டும் வந்து செல்வது போன்றுதான் கதை அமைந்து இருக்கும். ஆனால் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் முன்னணி நடிகைகளான நயன்தாரா, சமந்தா இருவரும் இணைந்து நடித்து இருப்பது ஆச்சரியமான விஷயம் தான்.
அதேசமயம் கதைப்படி இருவரும் பாசமான சகோதரிகளாக நடித்திருக்கிறார்கள் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டைட்டிலுக்கேற்றபடி இருவருமே விஜய்சேதுபதியை விரும்பும் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் படத்தில் இவர்கள் இருவரும் அதிக காட்சிகளில் இணைந்து வரும் விதமாகத்தான் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்தப்படத்திற்காக இவர்கள் இருவருமே ஒரு பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்யும் வீடியோ ஒன்று கூட சமீபத்தில் சோஷியல் மீடியாவில் வெளியானது குறிப்பிடத்தக்கது.