இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
சுராஜின் கத்திச்சண்டையில் மறுபடியும் காமெடி வேடத்துக்கு திரும்பினார் வடிவேலு. ஆனால், அதையடுத்து இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் ரெட் கார்டு போடப்பட்டு, வடிவேலு படங்களில் நடிக்க மறைமுக தடை விதிக்கப்பட்டது. நான்கு வருடங்களுக்குப் பிறகு நேற்று முன் தினம் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. தடையை விலக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியிருக்கும் வடிவேலு, தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய ரசிகர் மன்றம் தான். அடுத்து இரண்டு படங்களில் நாயகனாக நடித்த பின் காமெடி வேடங்களுக்கு திரும்புவேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தி சேனல் ஒன்று வடிவேலுவுக்கு வாழ்த்து சொல்ல போனில் தொடர்பு கொண்ட போது அவரிடம் 'அரசியலுக்கு முன்ன மாதிரி வருவீங்களா ' என்று கேட்கப்பட்டதற்கு கொஞ்சம் கோபமான வடிவேலு, பேசிட்டு இருக்கும் போது, உள்ள குச்சிய விடக்கூடாது, தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.